Skip to main content

kuttram199

                     
                  குற்றம்199


                பகுதி-1

பௌர்ணமி என்ற பெயர் சொல்லி கொண்டு சிரித்து சுற்றி திரியும் நிலாவும், அதை பிடிப்பதற்கு அலையும் நச்சத்திரம் போல இருந்த காட்சிகள், கண்ணை கொள்ளை கொள்ளும் நேரமாய் இருந்த இரவு  அது. சென்னையின் புறநகர்ப் பகுதி, மக்கள் அதிகம் பயணிக்கும் அண்ணா நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் புதிதாய் குடியேறினாள் அவள்.

அன்று இரவு,
                           அறை எண் 199, குறைந்த வெளிச்சம், அறை நடுவில் அவள் கட்டிலில்  படுத்து இருந்தாள். இல்ல, அவள் படுத்து கிடாதான்னு சொன்னா தப்பா இருக்கும், அவள் கத்தியால் கழுத்து அறுத்து  துவண்டு கிடந்தாள் என்று சொல்லலாம்.

                             நீல மேகங்களாய் இருந்த அவள் புடவை, தவறி விழுந்து  தரையை தொட்டு  கிடந்தது......

                             கரு மையின் அழகில் மிகுந்த புருவங்கள் தற்று தயங்கி மடிந்து கிடந்தது......

                             மெய் சொல்லும் அவளின் கருவிழியின் ஓரம் வடிந்த கண்ணீர் துளிகளின் அடையாளம்........

                             அவள் செந்நிற முகத்தில் இரு நகக்கீறலில் வடியும் இரத்த மொட்டுகள்......

                             அறையில் இருந்த கண்ணாடியில், தெளித்த இருந்த இரத்த சொட்டுகள்......

                             மெல்லிய கையில் கூரான கத்தி, இரத்த கறையில்.......

                             அறையின் ஒரு பக்கத்தில் நுனி  ஆணியில் மாட்டி இருந்த ரவி வர்மாவின் ஓவியம்......

                             ஒரு பக்கம் இரு காவலர்கள்,ஒருவர் அறையை ஆய்வு செய்கிறார், மற்றோருவர் தொலைபேசியில் பேசிக் கொண்டு இருக்கிறார்.....

                             இவை அனைத்தையும் மௌனத்தோடு, ரவிவர்மாவின்  
ஒரு ஓவியத்தை பார்த்து ரசித்து சித்தரித்து எழுதிக் கொண்டு இருந்தாள்  அவள்........

நேரம் நள்ளிரவை தொட, ஓவியத்தை ஆணியில் மாட்டிவிட்டு உறங்க சென்றாள் அவள்......

பொழுது விடிந்தது, அவள் விட்டு கதவு திறந்திருந்தது.மேல் வீட்டுக்காரர் வேளைக்கு செல்லும் போது அவள் வீட்டை பார்த்த அவர் பதறி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார்.காவலர்கள் அங்கு விரைய, இரு காவலர்கள் அவள் வீட்டுக்குள் நுழைந்தனர்.

அங்கு அவள்.....

நீல புடவை சரிந்து கிடக்க,முகத்தில் இரு கீறலுடன், கழுத்து அறுபட்டு,கண்ணாடியில் இரத்த துளிகள்,கத்தியில் இரத்தக்கறையுடன்  கழுத்து அறப்பட்டு இறந்து கிடந்தாள்.

இரு காவலர்களில் ஒருவர் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்க மற்றோருவர் அறையை ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார். அடுக்குமாடிக் குடியிருக்கும் மக்கள் அனைவரும்  பயத்தில் மூழ்கி தவித்தது கொண்டு இருந்த நாட்கள்....................



                                                            கொலையா???? 




       
                               

Comments

Popular posts from this blog

vivasayam[Agriculture]

          💭கரு மேகம்  வந்தந்தும் மழை வந்தது☂ மழை  வந்ததும் முளை வந்தது முளை வந்ததும் விவசாயிக்கு குரல் வந்தது  விவசாயின் குரல் வந்ததும் நாடு வளர்ந்தது  நாடு வளர வவிசயம் பெருகனும்             விவசாயம் வாழ விவசாயியை  மதிக்கணும்!!!💔💔💔💔

vithi payanoo...

" விதி பயனா இல்ல முட்டாள் தனமா"        ரவி வீட்டிற்க்கு இளைய பிள்ளை, வேலைத் தேடிக் கொண்டு இருக்கும் பட்டதாரி. மணி எட்டாவுது, அம்மா.....என்றான். தோ.....சப்பாத்தி ரெடி என்று ரவியின் அம்மா சொல்ல, எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர். உன் தந்தைக்கு உடம்பு சரி இல்ல, ரவி போய் மருந்து  வாங்கிட்டு  வா என்றாள் ரவியின் அம்மா.            ரவி மருந்து கடைக்கு சென்றான்.           இந்த மருத்து 80 ரூபா வரும் என்றார் கடைக்காரர்.                      சரி,கொடுங்க என்று 100 ரூபா கொடுத்தான் ரவி.          அவர் மீதம் கொடுத்ததைக் கண்டு குழம்பினான் ரவி.           சிறுது தூரம் வந்து யோசித்தான். இது தவறு, நமக்கு இந்த காசு  வேண்டாம் என ஒரு பக்கம் மனம் சொல்ல, பரவாயில்லை உனக்கு   கிடைத்த பரிசு இது என இன்னொரு பக்கம் சொல்ல இறுதியில் மனம் ஆசையின் பக்கமே தராசு சாய்ந்தது. வீட்டிற்கு மீத காசை  எடுத்து சென்றான் ரவி.          பொழுது சாய்ந்தது, புது நாள் விடிய ரவியின் தந்தை ரவியை அழைத்தார். ரவி, கோபி மாமாவுக்கு இரண்டாயிரம் பணம் அனுப்பணும்டா என்றார் ரவியின் தந்தை.                ச